Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் கமலம் மலர்; கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

டிசம்பர் 12, 2020 11:04

சென்னை: சேலத்தில் மாடி வீட்டு தோட்டத்தில் பிரம்ம கமலம் பூ பூத்து இருப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

சேலம் நான்கு ரோடு மெய்யனூர் பகுதியில் தீனதயாளன் மீனா தம்பதியினரின் வீட்டில் பிரம்ம கமலம் மலர் செடியை வளர்த்து வருகின்றனர். வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் இந்த அரியவகை பிரம்ம கமலம் பூ இன்று பூத்துள்ளது.

அதிசய பிரம்ம கமலம் பூ இரவில் மட்டுமே மலர்ந்து சூரிய உதயத்திற்கு முன் வாடிவிடும் தன்மை கொண்டது. வருடத்திற்கு ஒருமுறை இரவு 8 மணிக்குத் தொடங்கி நன்றாக விரிந்து முழுமையாக காட்சி தரும்.

இந்த மலரானது விடியற்காலை தொடங்குவதற்குள் சுருங்கி மொட்டு வடிவில் மாறிவிடும். மேலும் வெள்ளை நிறத்தில் நட்சத்திர வடிவில் பெரிய அளவில் இருக்கும் இந்த பிரம்ம கமலம் மலரை அக்கம் பக்கத்திலுள்ள மக்கள் ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்